12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை அணைத்து மகிழ்ந்தோம்..
சிட்டுக்குருவி போல் கதைகள் பேசி
பட்டுச் சிறகென உவகை கூடி
கலைகள் பாதி கல்வி மீதி
கணக்கும் சேர்த்துக் கற்றோம்..
ஆசிரியர் சொல் கேட்டு நடந்து
அப்பப்போ பிரம்படி பரிசாய் வாங்கி
பலவும் அறிந்து பழகிக் கொண்ட
பள்ளி நாட்கள் மேன்மை அன்றோ..
கால நேரம் கடைப்பிடித்து
கல்வி மீது ஆர்வம் காட்டி
உடற்பயிற்சி விளையாட்டு என்றும்
போட்டிகள் போட்டு வென்றும் நின்றோம்..
பள்ளிப் பருவம் உயர்த்தியது அன்று
அள்ளியே வாழ்வை அளித்தது இன்று
அத்திவாரம் பலமாய் போட்டால்
கட்டட வாழ்வு தழைத்தது சிறப்பே..
சிவதர்சனி இராகவன்
21/5/2025

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...