பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

பாரதி நீ ஒருசாரதியே!

நகுலா சிவநாதன்

பாரதி நீ ஒருசாரதியே!

சரித்திரம் படைத்த பாரதி நீயே
சங்கதி சொன்ன வீரனே நீயே
பாதகம் செய்யும் துட்டரை விலத்தி
பண்போடுழை வளர்த்திட்ட வள்ளல்

நாதமாய்த் தமிழை நன்றாய்ப்; பாட
வேதமாய் ஆக்கிய விந்தை மனிதா!
சோதனை வந்து தொட்டிட்ட போதும்
சோர்ந்திடா கவிஞன் நீயன்றோ!

பாரதி என்ற சாரதி நீயே
பண்பாய் வாழ வழியது சொன்னாய்
நாவலர் போற்றும் நற்றமிழ்ப் புலவா!
நன்றே உன்கவி நாளை வாழும்

ஞாலம் போற்றும் நற்தமிழ்புலமை
கோலம் போடும் கொள்கை மாறா
பாலம் அமைக்கும் பைந்தமிழாலே
பாரில் புதுமை செய்திடுவோம்

நகுலா சிவநாதன்1777

Nada Mohan
Author: Nada Mohan