திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பாலதேவகஜன்

சிறுமை கண்டு பொங்குவாய்

உரிமை மறுப்பும்
உடமை அழிப்பும்
தந்ததன் வலிகள்
உணர்விலே குற்ற

எம்மினம் காக்க
பொங்கிய ஒருவன்
புலிப்படை அமைத்து
பெரும்படை கொண்டான்.

சிறுமையாய் எங்களை
சிதைத்தவன் முன்னே
பெருமையாய் நிமிர
மனோபலம் ஆனான்.

கருமைகள் படர்ந்த
கார்முகில் காலம்
கவலைகள் போக்கிட
கரிகாலனாய் பிறந்தான்.

இடர்களுக்குள்ளே
இருந்திட்ட எம்மை
சுடராகி எரிந்து
பேரொளியினை தந்தான்.

பதுங்கியே வாழ்ந்த
வாழ்வினை மாற்றி
பாயும் புலியென எழுந்திட
பெரும் துணிவும் தந்தான்.

ஈழம்க் கனவை
இறுகப் பிடித்து
இருப்பின் அரணாய்
நெருப்பாய் எழுந்தான்.

சுடுகலை பயின்று
விடுதலை வேள்வியில்
தன்னை ஆகுதியாக்கிட
விருப்புடன் நின்றான்.

வஞ்சகம் சூழ்ந்த
வெஞ்சமர் தனிலும்
நெஞ்சுரம் குன்றா
நிலையுடன் நின்றான்.

இருப்பினை உணரா
நிலையாகி நின்று
இறைவனாய் என்றுமே
இதயத்தில் எழுந்தான்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading