திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

“பொங்குது பொங்கல்”

நேவிஸ் பிலிப் கவி இல(383) 16/01/2025

விடியலிலே வயல் நாடி
அந்தி சாயும் பொழுது வரை
ஆலையிலே அகப்பட்ட
கரும்பெனவே உடல் வருந்த

நெற்றியிலே துளிர்க்கின்ற வியர்வையுமே
முத்து முத்தாய் நெற் பயிரில்
உதிர்ந்திடவே வளர்ந்த பயிர்
கொத்தெனவே முற்றி வர

புதுப் பானை எடுத்து
புத்தரிசி அதிலிட்டு
ஆவின் பால் சேர்த்தங்கே
பொங்கி வர படைத்திடுவார்
நன்றிப் பொங்கல் கதிரோனுக்கே

படித்தவர்கள் பதவியிலே
உயர்ந்து வாழ
பால் பொங்கல் பொங்குகிறார்
நெய் மணக்க தித்திப்போடு

உழுவோரும் உழைப்போரும்
உயர்ந்திட வேண்டும்
எளியோர்க்கு அமைதி
மனதில் பொங்கிட வேண்டும்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading