11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 289
10/12/2024 செவ்வாய்
“ஈரம்”
———
நெஞ்சில் ஈரமின்றி,
நேர்மை ஏதுமின்றி,
வஞ்சகம் செய்வாரடி- மகளே!
வருந்தார் எப்போதுமடி!
அச்சம் எதுவுமின்றி,
ஆணவக் குறைவுமின்றி,
பச்சையாய் செய்வாரடி-மகளே!
பண்படாத மனிதரடி!
நச்சு நச்சென்று……..
நாள்முழுதும் குறைசொல்லி,
நச்சரிப் பாரடி- மகளே!
நன்மையேதும் செய்யாரடி!
துச்சமாய் எடுத்தெறிந்து,
“தூசு நீ” என்று சொல்லி,
எச்சில் உமிழ்வாரடி-மகளே!
ஏளனமும் செய்வாரடி!
பேச்சில் இனிமையின்றி,
பேதலிக்கும் குணமுமின்றி,
கூச்சமும் காட்டாரடி-மகளே!
கும்மியடிக்கும் மனிதரடி!
இச்சை கொள்வாரடி..
இம்சையும் செய்வாரடி..
குச்சென்றும் பாராரடி-மகளே!
குனிந்தும் செல்வாரடி!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...