பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மனிதமாய் எழு

வசந்தா ஜெகதீசன்
மனிதமாய் எழு
மாசற்ற உலகின் தூய்மை துலங்குமா
மனிதம் வாழும் புவியாய் பூக்குமா
எங்கும் சகதி நிறைந்த பாதை
எதிலும் தூய்மை விலகிய வாழ்க்கை
ஏக்கம் நிறைந்த விழிகளின் பார்வை
எங்கே தொலைத்தோம் நிம்மதி
நிஜத்தை
முட்களாய் தைக்குதே முரண்பாடுகள் பலது
செயலும் வாழ்வும் சீரற்று சிதைய
காணொளிக் காட்சிகள் கதைகளைக் காவ
புலப்படும் நிஜங்கள் உண்மையா உராய்வா
உலகே இன்று போரின் வதையில்
உலுக்கும் செய்திகள் சமூகவலையில்
மனிதம் வாழ நேயம் தேவை
ஒற்றுமை ஒங்கின் உலகே மேன்மை
மனிதமாய் எழுவோம் மாண்பில் உயர்வோம்
இனமாய் ஒன்றி இலக்கில் வெல்வோம்
மனிதம் வாழ மறுவழி சமைப்போம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan