மனோகரி ஜெகதீஸ்வரன்

மூண்ட தீ

கஞ்சிப் பானைகள்
களமேறக் காரணமென்ன
பிஞ்சுப் பாலகரும்
பிடிதேந்துகின்றனரே சுடரை
எஞ்சிய இவர்களும்
ஏந்தியவரே பேரிடரை
நெஞ்சும் வெடிக்குதே
நினைவுச் சுமையால்

மூண்டதீ இனப்பகை
மூட்டிய தீயே
மூண்ட தீயே
சுருங்கிச் சுடரானது
தீண்டிய அகோரத்தை
திசையெங்கும் துப்ப
மாண்டவர் நினைவை
மனதில் அப்ப
தாண்டவமும் ஆடுது
குழிமேடுகளில் முளைத்து

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading