12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
பாமுகமே வாழீ
பாமுகமே வாழீ
பாரூறும் பாமுகமே வாழீ
படைப்பகம் கொண்டவளே வாழீ
நேர்முகம் கொண்டவளே நீவாழீ
நெஞ்சகத்தில் நிலைத்தவளே நீவாழீ
பாரகம் காட்டுபவளே நீவாழீ
நேரத்தில் ஊர்பவளே நீவாழீ
நிகழ்ச்சிகள் பலதை எய்து
செய்தாய் எம்மைக் கைது
உந்தன் பாமுகம் கண்டு
உள்ளக் குரலொலி திண்டு
போகுதேயெம் பொழுதுகள் இனிதாய்
விழிக்குதே புலன்கள் எளிதாய்
செழிக்குதே அறிவும் பெரிதாய்
உயிர்க்குதே ஆக்கத்திறனும் உடனாய்
வளர்ந்து பரவி வாழுதே
எம்தமிழும் உந்தன் பாமுகத்தால்
நிகழ்வில் காளமாடுவோரின் உமிழ் திறத்தால்
தளிர்களும் வளரத் தருகின்றாய் தளம்
தன்னம்பிக்கை உயர
இடுகின்றாய் உரம்
இளசுகளும் பழசுகளும் இயங்குவதற்கு இடுகின்றாய் தளம்
ஏந்தி நிற்கின்றோம்
நாமும் நன்றிக்கலம்
நிகழ்வுகள் ஆக்கும் உந்திறன்
புகழைப் பூசியே செல்லும்
வாழ்த்துத் தகவலையே
சொல்லும்
மனோகரி ஜெகதீஸ்வரன்.
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...