கனவுப் பயணம்

வஜிதா முஹம்மட்படுத்துறங்கும் பாய்ப்பரப்பில் பலநிறச் சிறகுகட்டி விலாசமின்றி நான்பறப்பேன் வான்னுய௫ம் பறவைபோல் குறுக்கக்கட்டி குளமிறங்கி இடுப்பளவு நீர்மறைத்து தாமரை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பாமுகமே வாழீ

பாமுகமே வாழீ
பாரூறும் பாமுகமே வாழீ
படைப்பகம் கொண்டவளே வாழீ

நேர்முகம் கொண்டவளே நீவாழீ
நெஞ்சகத்தில் நிலைத்தவளே நீவாழீ
பாரகம் காட்டுபவளே நீவாழீ
நேரத்தில் ஊர்பவளே நீவாழீ

நிகழ்ச்சிகள் பலதை எய்து
செய்தாய் எம்மைக் கைது

உந்தன் பாமுகம் கண்டு
உள்ளக் குரலொலி திண்டு

போகுதேயெம் பொழுதுகள் இனிதாய்
விழிக்குதே புலன்கள் எளிதாய்
செழிக்குதே அறிவும் பெரிதாய்
உயிர்க்குதே ஆக்கத்திறனும் உடனாய்

வளர்ந்து பரவி வாழுதே
எம்தமிழும் உந்தன் பாமுகத்தால்
நிகழ்வில் காளமாடுவோரின் உமிழ் திறத்தால்

தளிர்களும் வளரத் தருகின்றாய் தளம்
தன்னம்பிக்கை உயர
இடுகின்றாய் உரம்

இளசுகளும் பழசுகளும் இயங்குவதற்கு இடுகின்றாய் தளம்

ஏந்தி நிற்கின்றோம்
நாமும் நன்றிக்கலம்

நிகழ்வுகள் ஆக்கும் உந்திறன்
புகழைப் பூசியே செல்லும்
வாழ்த்துத் தகவலையே
சொல்லும்

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading