மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர்

முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே

துள்ளிக் குதித்து விளையாடிய
எம் பிறந்த மண் சிவந்து எரிந்து
சுடுகாடாய் சாம்பலாகி வெந்தே
இருந்த இடந்தெரியா முடங்கியது

படாதபாடு பட்டுத் துடி துடித்ததே
உயிர்களில் வெடித்த கொத்துக்
குண்டுகள், பொசுபரசு நச்சுகள்
போர் விமானத்தில் சிதறியதே

சொல்லிச் சொல்லிக் கதறுகிற
அழுகுரலில் குதறிய இரத்தக்
கண்ணீரில் ஊறிய உதிரமதில்
மழலை முதல் இளையோரும்
பெரியோரும் பதறிய மே 18 ஐ
என்றென்றும் மறக்கமுடியுமா?

Nada Mohan
Author: Nada Mohan