கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர்

முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே

துள்ளிக் குதித்து விளையாடிய
எம் பிறந்த மண் சிவந்து எரிந்து
சுடுகாடாய் சாம்பலாகி வெந்தே
இருந்த இடந்தெரியா முடங்கியது

படாதபாடு பட்டுத் துடி துடித்ததே
உயிர்களில் வெடித்த கொத்துக்
குண்டுகள், பொசுபரசு நச்சுகள்
போர் விமானத்தில் சிதறியதே

சொல்லிச் சொல்லிக் கதறுகிற
அழுகுரலில் குதறிய இரத்தக்
கண்ணீரில் ஊறிய உதிரமதில்
மழலை முதல் இளையோரும்
பெரியோரும் பதறிய மே 18 ஐ
என்றென்றும் மறக்கமுடியுமா?

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading