” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர்

முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே

துள்ளிக் குதித்து விளையாடிய
எம் பிறந்த மண் சிவந்து எரிந்து
சுடுகாடாய் சாம்பலாகி வெந்தே
இருந்த இடந்தெரியா முடங்கியது

படாதபாடு பட்டுத் துடி துடித்ததே
உயிர்களில் வெடித்த கொத்துக்
குண்டுகள், பொசுபரசு நச்சுகள்
போர் விமானத்தில் சிதறியதே

சொல்லிச் சொல்லிக் கதறுகிற
அழுகுரலில் குதறிய இரத்தக்
கண்ணீரில் ஊறிய உதிரமதில்
மழலை முதல் இளையோரும்
பெரியோரும் பதறிய மே 18 ஐ
என்றென்றும் மறக்கமுடியுமா?

Nada Mohan
Author: Nada Mohan