திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்

சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்

பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன் பாசமாய் தேடுவேனே
வாமழை நீயும் வசந்தமே துலங்கிடவே
காண்புகழ் ஓங்கிடவே காதலுமே கூடுதே

ஆடிடும் மனசுக்குள் மத்தாப்பு விரியுதே
தேடியே வருவாரு தேவையை உணர்ந்தவரு
மல்லியப்பூ வாசம் என்னாமனோட நேசம்
அல்லல் எனக்கில்லை ஆணழகன் பாருங்கடி

மெல்லெனக் குளிரவும் வைப்பானே என்னையும்
நில்லெனச் சொல்லியே நெகிழும் அகமுமடி
அன்பினால் வளைப்பானே அணைத்துமே நிற்ப்பானே
கட்டிளம் காளையடி களையான சிங்கமடி

விண்மீனாய் ஒளிர்வேனே விரையமும் இல்லாது
ஏங்கும் இதயத்திலே இலட்சியம் தோற்பதில்லை
மூங்கில் காட்டினிலே இசைக்கும் நாதமாக
காத்திருக்கும் நேரமெல்லாம் பூத்திருக்கும் எண்ணமடி

சிவரூபன் சர்வேஸ்வரி

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading