“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மாதவமே உன்னை!

நகுலா சிவநாதன்

மாதவமே உன்னை!

பாதகம் இல்லாப் பார்வையின் தரிசனம்
மாதவம் போலே மங்காத தியாகம்
வானவர் வாழ்த்த வருமொழி சேர்ந்திட
ஞானத்தில் ஒளிரும் நற்தீபம் கார்த்திகைத் தீபம்

கல்லறை தோறும் காரிருள் சூழ
கானகத்தின் ஒளிப்பிழம்பு தூரத்தெரிய
விண்மீன்கள் தண்னொளி பாய்ச்சிட
விளக்கும் தீபம் மாவீர மாதவமே!

மாதவம் உன்னை மானிடர்க் களிக்க
சேய்தவம் புரிந்த செங்காந்தள் மலர்விரிய
பாதகம் செய்வோர் தீமையின் பிடியினில்
பக்குவம் பேசும் வீரரின் தியாகம்
விண்ணுறை போற்றுமே!

நகுலா சிவநாதன் 1788

Nada Mohan
Author: Nada Mohan