பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மாற்றம்

ரஜனி அன்ரன்

“ மாற்றம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.09.2024

மாறும் உலகின் விதியில்
மறைந்த விடியலின் கனவில்
மறந்து போகும் கணத்தில்
மாற்றமும் மலருதே நொடியில்
மாற்றமென்பது உலகியல் நியதி
மாற்றமென்பது வளர்ச்சியின் அடையாளம் !

நீரின் ஓட்டம் மாறினாலும்
நிலாவின் ஒளிகூட சுருங்கினாலும்
மாறிக் கொண்டேயிருக்கும் மாற்றங்கள்
முடிவற்ற பாதை தனில்
முடிவடையும் கனவுகூட மாறிடும்
வாழ்க்கைப் பயணமதில்
மாற்றங்கள் திருப்பங்களாகிட
ஏமாற்றங்கள் மனதைக் காயமாக்குமே !

மலரும் பூவின் வாட்டம் போல்
மறந்து போகுமே கடந்தகாலமும்
மாறியது நேற்றைய நாளும்
மாறுமே நாளைய வேளையும்
நிமிசம் மாறும் வருசம் மாறும்
நமக்கும் மாற்றம் நிட்சயமே
காலத்தின் வலிகளை மறக்க
வாழ்வில் ஏற்றம்காண வேண்டுமே மாற்றம் !

Nada Mohan
Author: Nada Mohan