திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

மௌனத்துள் நிறை அஞ்சலி

இரா.விஜயகௌரி

சிலிர்த்துப்போகிறது. நெஞ்சம்
சிந்தித்தால் பதறித் துடிக்கும் நொடிகள்
விதைக்கப்பட்ட வீரத்தின் உதிரம்
விடியலொன்றே தேடிய கனவின் காலம்

ஆம் ஆத்மாக்களை அஞ்சலிக்கும் நேரம்
அவலங்களால் வரையப்பட்ட வாழ்வின் ரணம்
ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் அனாதைகளாக
வினாக்குறிகளுடன் விடை தேடும் மாந்தர்கள்

எதிர்பார்ப்புகளின்றிய மாவீர்ர் சுவடுகள்
மண்ணின் மீட்பை நோக்கிய பெரும்பயணம்
சாவைத்தரிசித்த மீள முடியாத கணங்கள்
தம் உறவுகளை விட்டுச் சென்றதெங்கே

ஆரவாரங்களின்றி அமைதியாய் அன்பாய்
உணர்ந்து உயிர்ப்பை எழுதும் விலகா நேசமாய்
மௌனமாய் கை கோர்த்தெழுவோம்
மரணத்திலும் விலகா மாவீர்ர் நினைவெழுதி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading