பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மௌனத்துள் நிறை அஞ்சலி

இரா.விஜயகௌரி

சிலிர்த்துப்போகிறது. நெஞ்சம்
சிந்தித்தால் பதறித் துடிக்கும் நொடிகள்
விதைக்கப்பட்ட வீரத்தின் உதிரம்
விடியலொன்றே தேடிய கனவின் காலம்

ஆம் ஆத்மாக்களை அஞ்சலிக்கும் நேரம்
அவலங்களால் வரையப்பட்ட வாழ்வின் ரணம்
ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் அனாதைகளாக
வினாக்குறிகளுடன் விடை தேடும் மாந்தர்கள்

எதிர்பார்ப்புகளின்றிய மாவீர்ர் சுவடுகள்
மண்ணின் மீட்பை நோக்கிய பெரும்பயணம்
சாவைத்தரிசித்த மீள முடியாத கணங்கள்
தம் உறவுகளை விட்டுச் சென்றதெங்கே

ஆரவாரங்களின்றி அமைதியாய் அன்பாய்
உணர்ந்து உயிர்ப்பை எழுதும் விலகா நேசமாய்
மௌனமாய் கை கோர்த்தெழுவோம்
மரணத்திலும் விலகா மாவீர்ர் நினைவெழுதி

Nada Mohan
Author: Nada Mohan