ரஜனி அன்ரன்

“ உழைப்பின் உன்னதர்கள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.05.2022

உலகையே தோள்களில் சுமந்து
உழைப்பினை உரமாக்கி
உண்ண உடுக்க உறங்க
உன்னதமாய் நாம் வாழ
ஆலைகளில் தொழிற்சாலைகளில்
வீதிச்சாலைகளில் சாக்கடைகளில் ஆழக்கடலில்
சேற்று வயல்களில் சுரங்கங்களிலென
உழைக்கும் உழைப்பாளிகள் என்றும் உன்னதர்களே !

உழைக்கும் உன்னதர்களை
மேன்மைப்படுத்தும் மே மாதமே
மேதினியில் பூத்து மேன்மை பெறுகிறாய் நீயும்
இரும்பாக தமை வருத்தி
கரும்பாக நாம்வாழ
உரமோடு உழைக்கும் உழைப்பாளிகளே
உலகினைத் தாங்கும் உன்னதர்கள் !

உழைப்பாளிகளின் கடின உழைப்பில்
உருவானதே இவ்வுலக அதிசயங்கள்
உலகம் இயங்க உயிர்கள் வாழ
உன்னத உழைப்பாளிகளின் உழைப்பு அவசியமே
வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்
கடின உழைப்பினால் உலகை ஆழட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading