இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.01.24
ஆக்கம் -129
சிரிப்பு

நீர்க்குமிழி போன்ற
நிலை அற்ற வாழ்வு
குலையாதிருக்க கூடி
முகம் மலர்ந்திடு

வேரோடும் சந்ததி பல
சீரோடும் சிறப்போடும்
சந்தோஷமாக வாழ
சிரித்து மகிழ்ந்திடு

முகங் கடுகடுக்க
முறைச்ச மூக்குடன்
விறைச்ச நரிச்
சிரிப்பின்றி மனதார
நிறைத்திடு

குறும்போடு குதூகலித்து
நறு மனத்தோடு நாலு
பேரில் கவர்ந்து இதமாகப்
பதமாகச் சுவைத்துச்
சிரித்திடு

மெய் எனும் உடம்பில் பொய்
ஊற்றி வளரும் மாந்தர் நோய்
விட்டுப் போக வாய் விட்டுச்
சிரித்து ஆரோக்கியமாக்கிடு .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading