பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ராணி சம்பந்தர்

03.12.24
ஆக்கம் 169
பனிப் பூ

வீசிடும் பனிப் பூ
பேசிடும் பல வடிவமதில் மோதிடும் வேகம்

மாசியில் புல் நுனியில்
மாசிப்பனி மூசி பூத்திடும் தாகம்

பசியில் புசிக்க நோய்க்கு அருமருந்து
ஆகும் வாழை இலையில் சொட்டுச்
சொட்டாய்க் குட்டி
முட்டும் மோகம்

ஒளியூட்டும் கதிரவன்
இடையில் கண் கூசும்
நடையில் பனிக் காலநிலை மாற்றமதில்

கல்மழை பொழிந்து
வீட்டு ஓடு , வாகனம்
பொட்டென உடையும்
பாகம்

வளிமண்டலத் தூசியோடு போராடும்
குளிரில் மழைத்துளி
பனித்துகழாகி உறைந்த பனிப் பாறை
வெப்பமதில் உருகும்
நீர் மட்டம் உயர வரும்
பேரழிவு சோகமே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan