வசந்தா ஜெகதீசன்

வலி..
வாழ்வின் பாதை செதுக்கிய ஓடம்
வலிகளின் சுவடுகள் காயங்களாகும்
ரணமாய் கணமாய் கீறலின் பதிவு
ஆறிடும் வேளை
பட்டறிவின் பகிர்வு
அம்பெனத் தைத்து அனுபவம் கூறும்
வலிகளும் வழிகளைத் தேடியே ஓடும்
வருமுன் காத்திட
வரம்பென ஆகும்
உடுக்கை இழந்தவன் கைபோல உதவியின் நிஜத்தில் உபாதையே குன்றும்! நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

    Continue reading