மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வலியும் வழியும்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 232

காட்டில் வளரும் மூங்கில்கள்
சிறுதுண்டாக வெட்டி துளை போடும்
போது வரும் வலியை தாங்குவதனால்
பிறக்கும் இசையை பலரும் இரசிக்க

இளமையில் ஏற்பட்ட வறுமை
வழியை தரும் என்பது உண்மை
ஊக்கத்துடன் முயற்சி செய்ய
வலிமறந்து உயர்ந்திட வழிபிறக்கும்

பெற்றோர் தாங்கும் வலி
பிள்ளைகள் சிறக்க வழி
வகுக்கும் என்பது நியதி
வலியின்றி சிறந்த வாழ்வேது

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan