20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
விரல் நுனி அறிவியல்
சிவதர்சனி இராகவன்
விரல் நுனியில் அறிவியல்…!
வியாழன் கவி 2012!
ஆற்றங்கரை ஓரங்களில்
ஆழமாய் வளர்ந்த நாகரீகம்
அளித்த வளங்களில் ஒன்றே
எழிச்சியாய் வளர்ந்த அறிவியல்
மானிடத் தேடலும் முயற்சியும்
மண்ணில் எத்தனை கண்டுபிடிப்பு..
மகத்தான சாதனை யாவுமாய்
மரணத்தையும் தாண்டி வாழுதே
அண்டவெளி தொடக்கம் அதல்
பாதாளம் வரைக்கும் தொடர
விந்தை மிகு விஞ்ஞானமும்
அசுர வளர்ச்சி கொண்டதே..
உள்ளங்கை உரசலில் பொறி
அள்ளித் தருமே எத்தனை வசதி
இருக்கும் இடத்தில் நகராதே
இணைக்கும் இணையமும் நமை
கற்றல் படைத்தல் விற்றல் விருது
பற்பல ஆளுமை விரல் நுனிக்குள்..
பிறந்திடும் குழந்தையும் சாதிக்கும்
இறப்பின் பின்னும் போதிக்கும்
காலத்தின் கால்களின் சுழற்சியே
நன்மையும் தீமையுமாய் கலக்குது
நாளைய உலகின் நிலையும் இது
கோழையல்ல அறிவியல் விரல் நுனி..!
சிவதர்சனி இராகவன்
25/7/2024

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...