பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஷர்ளா தரன்

நீண்ட இடைவெளியின் பின்
அனைவருக்கும வணக்கம்

மாசி
முழங்கால் வரை பாய்ந்த வெள்ளம்
கணுக்கால் வரை போய் கரைஒதுங்கிட
மாசிப்பனி அது வந்திடுமே
மூசி் அதன் வீரத்தை காட்ட
பேசவார்த்தை இல்லை
பேசாமல் போகவும் முடியவில்லை

தளிர்த்த அறுகின்மேல்
தத்துருவமாய் வந்தமர்ந்து
பரந்த வெளியில் பஞ்சாய் படர்ந்திருக்கும்
மெல்லிய சூரியக்கதிர் மேனி தடவிட
மெல்லமாய் நழுவி
நல்லவனாய் தரைக்குள் போகும்
நல்ல காலையை இதமாய் தந்திடும்
மகத்தான மாசி அது

மாசிப் பொங்கல்
மாசி மகம்
தைப்பூசம்
பூத்த நெல்லில் இருந்து புதிர் எடுத்து பொங்கல் அதில் பொங்கி
காத்திருந்து கடவுளுக்கு படைத்து
வேர்க்க விறு விறுக்க
வேலை செய்த விவசாயி
வேதனையோடு வேண்டி நிப்பான்
வெகுவான விளைச்சலுக்காய்
தைப்பூசநாளில்
மா பெரும் மாசியில்

ஷர்ளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan