பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அடையாளம்

சுமத்ரா தேவி

கவிதை இலக்கம் 16
தலைப்பு
அடையாளம்

அடிவேர் அகழ்ந்து அடிப்படை தகர்த்து
துடிப்பவர் துவழ
துன்பங்கள் சேர
கொடும்பகை தொடுக்கும்
குடிகளின் கூட்டால்
மடிந்தவர் நொடிந்தவர்
அடி இழந்தவர் நோக
புவிதனில் இவர்கள்
புலன் சூட்டுவதென்ன
ஏதிலிகளாக ஏழைகளாக
இயல்புகள் தொலைக்க
இவர்கள் ஆற்றும்
இன முரண் தான் என்ன
அடையாளத்தின் அழிப்போ
சுமத்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading