நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

அடையாளம்

சுமத்ரா தேவி

கவிதை இலக்கம் 16
தலைப்பு
அடையாளம்

அடிவேர் அகழ்ந்து அடிப்படை தகர்த்து
துடிப்பவர் துவழ
துன்பங்கள் சேர
கொடும்பகை தொடுக்கும்
குடிகளின் கூட்டால்
மடிந்தவர் நொடிந்தவர்
அடி இழந்தவர் நோக
புவிதனில் இவர்கள்
புலன் சூட்டுவதென்ன
ஏதிலிகளாக ஏழைகளாக
இயல்புகள் தொலைக்க
இவர்கள் ஆற்றும்
இன முரண் தான் என்ன
அடையாளத்தின் அழிப்போ
சுமத்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan