மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அது எது

ஜெயம் தங்கராஜா

கவி 731

எது அது

எனக்குள்ளும் உண்டு உனக்குள்ளும் உண்டு
யாரிடம் இல்லை இதன் செயற்பாடு
எவரிடம் இல்லை இதனது வெளிப்பாடு
என்னிடமில்லையென்றால் இல்லை அங்கு மெய்ப்பாடு

விலங்குகளிடமொன்றும் பெரிதாக நானிதைப் பார்த்ததில்லை
பட்சிகளிடமும் குறைந்தபட்சமேனும் நானிதை காணவில்லை
மனிதனால் மட்டுமே செய்யக்கூடிய திருவிளையாடலது
இயல்போ இயற்கையோ செயற்கையோ தெரியாதது

அன்று நக்கீரப்புலவரிடம் சிவபெருமான் காட்டியது
இன்றும் பெரும்பாலானோர் அட்டகாசமாய் காட்டுவது
நல்லதுக்கு உட்பட்டால் பொல்லாமை நிகழாது
கெட்டதற்கு பயன்படின் வாழ்க்கைக்கு மெய்யேது

பற்பலர் இதன்பால் கைதேர்ந்தவர்களாகவே உள்ளார்கள்
சிற்சிலர் அதையறியாது முட்டாள்கள் ஆனார்கள்
மெய்யதா பொய்யதா அறிந்திட ஞானமுமில்லை
செய்வார்கள் செயலில் இருப்பது தெரிவதுமில்லை

நாளுக்குநாள் கூச்சமேயின்றி வாழ்க்கையில் அரங்கேறும்
பயனடைந்தவர் இவராக பாதிக்கப்பட்டவர் வேறொருவராக
கையும் மெய்யுமாக பிடிபட்டாலும் சகசமப்பா
வாழ்க்கையிலை சக்கைபோடோபோடும் இவர்களுக்குத்தான் காலமப்பா

ஜெயம்
27-06-2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading