கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

அது ஒரு கனாக்காலம்

நகுலா சிவநாதன்
அது ஒரு களாக்காலம்

நிலாக்கால மேகங்கள் நீந்துகின்ற விண்மீன்கள்
கனாக்கால கோலங்களாய்க் காலச்சுவட்டில்
பதிந்த அந்தக் காலம்

முற்றத்த மணலிலே முழுஇரவும்
அற்புதமாய் பாசஉறவுகள் சூழ
பொற்பதமாய் வாழ்ந்த காலம்
சொற்பனமாய் இருந்ததே!எமக்கு
அது ஒரு கனாக்காலம்

பள்ளிப்பருவம் துள்ளி ஓடி
துயர் மறந்து கிள்ளைமொழிபேசி
கண்கிணிநாதமாய் …….
உரசுகின்ற மொழிக்குள்ளே ஊசலாடி
உள்ளம் மகிழ்ந்தகாலம்
அதுஒருகனாக்காலம்

காலங்களைக் காதலித்த கனாக்காலம்
சாதனைகளும் வெற்றிகளும் சாதித்தகாலம்
விளையாட்டும் ஓட்டமும் விண்முட்டப் பதக்கங்களும் பெற்றிட்டு மகிழ்ந்த காலம்
கனவுகளாய் இன்று மறைந்ததே!

குயிலின் குரலோசை குதூகல மணியோசை
வயலின் வரம்போர நடைபவனி
வாஞ்சையான புல்வெளிகள்
தடவிக்கொடுத்த பயிரினம்
தாவும் முயல் குட்டிகள்
அத்தனையும் ரசித்த அந்த கனாக்காலம்
எமை விட்டுப் போனதோ!

நகுலா சிவநாதன் 1817

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading