கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன்
…. காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின் கணக்கிலே
தமிழரின் அறிவகம்
அரிச்சுவடி நூலகம்
பூண்டோடு அழிப்பதற்காய்
புத்தியற்றுச் சிதைப்பதற்காய்
தமிழினத்து வரலாற்றை
தகர்த்திட துணிந்தனர்
ஆகுதிக்கு இரையாக்கி
அறிவற்ற ஜிவிகளாய்
ஆதாரமற்ற தமிழர்களாய்
நிலைகுன்ற வைப்பதற்கு
அனலிட்டு ஆண்டுகள் 45-இன்று
தவிடு பொடியானதே
தமிழரினம் துடித்த கணம்
வெந்தணலின் வேதனையில்
வெந்தே வீறுகொண்டோம்
மீளமைப்பில் மிடுக்கானோம்
அன்று வைத்த தீ
இன்றும் எரி நெருப்பே
அகத்தின் குன்றிலே
அகலாத அவலமே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan