கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

கவி 724

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

உறவுகளுள் இவரே உன்னத உறவாம்
வரமாக கிடைத்திட்ட உயரிய வரமாம்
அள்ளி அள்ளி கொடுப்பாரே பாசத்தை
எள்ளளவும் குறைத்திடார் சொரியும் நேசத்தை

ஆயிரம்பேர் வாழ்க்கையில் வருவார்கள் போவார்கள்
ஆயினும் இவரைப்போல் யார்தான் ஆவார்கள்
பெத்தவள் பேறுபெற்றவள் அந்த படைத்தவரால்
இத்தரையோ வணங்கிடும் இவளை படைத்தவளாய்

உதைத்தே உருண்டு புரளுவான் சேய்
அதையும் உவகையுடன் ஏற்றுக்கொள்ளுவாள் தாய்
சுமையினை விரும்பியே தாங்கிடும் சுமைதாங்கி
உமையொறுத்து வாழ்ந்தாயே வலிகளைத்தான் வாங்கி

அன்னையை மிஞ்சிய தெய்வமும் இல்லையே
உன்னத செயல்களும் பிறந்திடும் எல்லையே
இறைவனோ தெரியாது இதுவரைக்கும் அரூபியாய்
இறைவியாய் அன்னை தரிசிக்கும் சொரூபியாய்

சுவர்க்கத்தின் வாழ்க்கை மண்ணுலகில் நகரும்
இவரில்லா வாழ்க்கை பூமியில் நரகம்
வாழ்த்திவிட தாயவளை நாளொன்று போதாது
வாழ்ந்துகொண்ட அதிசயமே உன்னருளின்றி வாழ்வேது

ஜெயம்
08-05-2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading