கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியில்…

தந்தையர் தினமாகும் மதிப்பிலே
அன்னையர் தியாகத்தின் நிகருக்கு
அவனியில் ஈடேது உறவிலே
தன்னிகரில்லாத தாய்மையே
தந்தையர் அன்பிலும் மெய்ப்படும்
தாங்குதூண் உறவாக வசப்படும்
காரிருள் நீக்கிய வான் போல
காசினி மிளிரப் பெய் மழையாக
நேசமும் அன்பும் ஒன்றிக்கும்
தாய்மையின் உறவ தனித்துவம்
தைரியத் தந்தையே முதலிடம்
பேணிடும் சீர்கொள் சிறகிற்குள்
பேறுகொள் பிள்ளைகள் பெரும்பேறு
நேர்பட வழிசொல் வாழ்வு செப்பி
அறநெறி பாடத்தில் அறிவூட்டி
அவனியில் ஈகையின் ஈரமூட்டி
பலப்படும் அன்பில் பாசமூட்டி
பண்பட்ட இல்லத்தில் பாதுகாத்து
நிமிர்விலே நித்தில வேரூன்றி
நிறைமதியானார் தாயன்பில்
நிகரெனப் பாசத்தில் குன்றில் விளக்காய்
தாய்மையை தனக்குள் அடைக்கலமாய்
வாய்மையில் வழியிட்ட மறு உருவம்
தந்தையே அவனிக்கு ஆணிவேராய்
தாயென வாழ்கின்ற உறுதுணையே
பாதைகள் கதை சொல்லும் பலநூறாய்
பண்பட்ட இதயங்கள் வரலாறாய்
அவனிக்கு நிகருண்டா இரு தாய்மை
அன்னையும் தந்தையும் இருசுடர்கள்
வாழ்வினை ஒளிர வைத்த வரம் நீங்கள்.
நன்றி மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading