” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“அன்பின் வழியினிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(563)

அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே நாடி நின்றால்
ஈடில்லா பேரின்பம் கோடி பெறும்

அன்பென்ற பண்பொன்றே
பலத்தைக் கூட்டும்
மாந்தர்க்கு பயன் கருதா
செயல்பாடே மனதிலோங்கும்

புரிதலில் செழிக்குமன்பு
மன்னிப்பில் மலர்ந்து நிற்கும்
கொடுப்பதில் மனம் மகிழ்ந்து
பொறுப்பதில் பெருமை கொள்ளும்

வேதனை துன்பம் வெறுப்பின்றி
மேலான நல் வாழ்வு வாழ்வதற்கே
போதனைகள் நன்நெறிகள் மனதிலேற்று
இறையன்பை உணர்ந்து இன்புற்று

அன்பொன்றே மேலாக கொண்டிடுவோம்
மேதினியில் மேன்மை பெற்றே வாழ்ந்திடுவோம்
அன்பென்னும் விதையை விதைத்திடுவோம்
அன்பையே நாளும் வளரத்தெடுப்போம்…..
அன்புடன் நன்றி ………

Author: