” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதன்

வசந்தத்தில் ஒரு நாள்
………

தாய்நிலத்தில்
நாங்கள் வாழ்ந்த காலத்தில
வசந்தத்தில் ஒரு நாள்
சித்திரைத் திங்கள்
முழு நிலா நாளில்
எங்கள் கடலின்
மணற்பரப்பில்
தாய் தந்தை
அண்ணன்மார்கள்
தங்கையுடன்
அறிவார்ந்த கதைபேசி
அலைவீசும் கடலோடு
அளவின்றி மகிழ்ந்திருந்தோம்
அந்தநாள் என்றுவரும்?
இன்று எண்ணிப்
பார்க்கின்றேன்
தந்தையோ
இன்றில்லை
அண்ணனோ நோய் மடியில்
தங்கையோ தாய்மண்ணில்
துயிலும் இல்லத்தில்
மீளாத்துயரத்தில்
வசந்தத்தில்
ஓர் நாள் என்று வரும்?

வெள்ளி அலை துள்ளிவரும் – நெஞ்சை
அள்ளும்படி மகிழ்ச்சி
தரும்
தாய்மடியில் நான் படுத்து
நிலவொளியாய்ச்
சிரித்திருப்பேன்
அண்ணன்மார் கைபிடித்துக்
கடல் நீரில
கால் நனைப்பேன்
ஓயாத அலைவீச்சில்
ஓடி வந்து
கரையிருப்பேன்
மக்கள் அலை
ஒரு பக்கம்
குழுக்குழுவாய்
கூடியிருக்கும்-அந்தக்
காட்சி கண்டு
வியந்திருப்பேன்
வசந்தத்தில் ஒரு நாளை
எண்ணி எண்ணிப்
பார்க்கின்றேன் – இன்று
எங்கள் நிலம்
எதிரிகையில்
எப்படித்தான்
மகிழ்ந்திருப்பேன்?
புலம்பெயர்ந்த நாட்டில் வந்து
பொழுதல்லாம் உழைக்கின்றேன்
வசந்தத்தில்
ஒரு நாளை
கவிதைகளில்
நான் வடித்தேன்
காற்றலையில்
கவி படித்தேன்!

– அபிராமி கவிதன்
09.01.2024

Nada Mohan
Author: Nada Mohan