பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அபிராமி கவிதாசன்.

21.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -215
தலைப்பு !
“விடியல்”
விடியல் பொழுதே வருக வருக
விண்ணில் ஒளிகொண்டு
விளக்காய் வருக //

பட்சிகள் நாதம் தருக தருக
பலவண்ண குரலில் பாடல் தருக //

மாசற்ற காற்றில்
சிலுசிலு தென்றல்
மனதைத் தொட்டு மகிழ்வாய் செல்க //

நிலமகள் குளிர நீரும் தெளித்து
நித்தம் முற்றத்தில் கோலம் வரைக//

வைகறை மலர்கள் வாசம் வீசிட
மோகம் கொண்டு வண்டுகள் சேர்க //

நிலைப்பெண் மெல்ல மேற்கில் மறைய
நித்தில பரிதி கிழக்கில் மலர்க /

நனிமிகு நன்றிகள்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading