” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-219
தலைப்பு !

“ஆற்றல்”
ஆற்றல்கள் பலவற்றை
ஆட்க்கொண்ட் ஆத்மா
ஆயிரம் கனவோடு
ஆர்பரிக்குது ஓர்ஜீவன்

ஏதேனும் ஓர்சக்தி
எப்படியும் அமைந்திருக்கும்
எத்தனையோ சக்திகளை
எப்படித்தான் கொண்டீரோ

ஒவ்வொன்றும் ஓர்சக்தி
ஒவ்வொரு ஆற்றலுக்கும்
ஓர்ஒளி வடிவமுண்டு
ஒளிர்கிறது தினம்தோறும்

பன்முகத் திறனாலே
பாரினில் பலவடிவம்
பக்கங்கள் ஒவ்வொன்றும்
பண்புகளை காட்டிடுதே

நிறைகுடம் தழும்பிடுமோ
நிறைமதி ஞானமுடன்
நிலாப்பெண் தேய்கிறாள்
நித்தமும் நினைவாளே

இப்படியும் ஓர்ஜீவன்
இத்தரணியில் எப்படி
இதயமற்று தடமாறியது
இன்னுமே கனவுதான்

அத்துணைக்கும் காரணம்
அவரின் ஆற்றல்மிகு
அற்புத செயல்கள்தான்
அடிமையாக செய்தனவே

நன்றி வணக்கம்🙏🏻
அபிராமி .

Nada Mohan
Author: Nada Mohan