” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-28..
தலைப்பு!

“அதிரடி”
………….
கையூட்டு ஊழல்
பெருச்சாளி – அதன்
கழுத்தை இறுக்கும்
புதிராளி!

நாட்டைத் திருத்த
வந்தாரு – அனுரா
நல்லாட்சி நடத்த
துணிந்தாரு!

கோட்டையில் ஓட்டை
பார்த்தாரு – அங்கு
குள்ளநரி யாரென
பிடித்தாரு!

தேசிய கீதம்
இசைத்தாரு – புத்த
பிக்குவும் எழுந்து
நின்றாரு!

அதிரடி பேரடி
கொடுத்தாரு – அனுரா
செயலே புரட்சியின்
வரலாறு!

அரசியல் கொள்ளையர்
பல நூறு – அனுரா
அடித்தால் சிதறுவார்
நீ பாரு!

சமநிலை வாழ்க்கை
மலர்ந்திடவே – மக்கள்
சகலரும் அன்பாய்
வாழ்ந்திடவே!

வறுமையை நாட்டில்
போக்கிடவே – அனுரா
வந்தார் நன்மை
படைத்திடவே!

தமிழர்கள் துயரைத்
துடைத்திடவே – அனுரா
தனித்துவம் படைப்பார்
நிலைத்திடவே!

சிங்கப்பூர் மலேசியா
நாடெனவே – அனுரா
செய்வார் உழைப்பால்
அனுதினமே!

அனுரா ஆட்சிக்குக்
கை கொடுப்போம் – அவர்
அதிரடி வென்றிட
கவி படிப்போம்!

– ஆசிரியை:அபிராமி கவிதாசன்
– 08.10.2024

Nada Mohan
Author: Nada Mohan