அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853
காலைக் கதிரோனின் கண்விழிப்பு
கனவுகளின் ரீங்கார நினைவு
அமைதியின் விடியலில் இன்று
ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள்

மெல்ல விரித்தெழும் கதிரின் வீச்சு
சொல் வார்த்தை யில்லா பேரழகு
அள்ள அள்ளக் குறையாத விரிப்பு
ஆகாயம் எங்கும் முகில்களின் வனப்பு

பறவைகளின் பண்ணிசை தொடங்கும்
பாரெங்கும் ஒலிகளின் பரபரப்பு விரியும்
புதிய பாதைகளின் விழி திறப்பு
பூக்களின் மென்பட்டு இதழ் விரிப்பு

அமைதியின் ஓடத்தில் ஆழ்ந்தபிறப்பு
வாழ்க்கையின் முகிழ்ப்பில் ஓர்நாள்
மௌனமாய் விரியும் புதுப்புன்னகை
மகிழ்ச்சியில் துளிர்த்திடும் அமைதியின் விடியல்

நகுலா சிவநாதன்

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading