” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853
காலைக் கதிரோனின் கண்விழிப்பு
கனவுகளின் ரீங்கார நினைவு
அமைதியின் விடியலில் இன்று
ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள்

மெல்ல விரித்தெழும் கதிரின் வீச்சு
சொல் வார்த்தை யில்லா பேரழகு
அள்ள அள்ளக் குறையாத விரிப்பு
ஆகாயம் எங்கும் முகில்களின் வனப்பு

பறவைகளின் பண்ணிசை தொடங்கும்
பாரெங்கும் ஒலிகளின் பரபரப்பு விரியும்
புதிய பாதைகளின் விழி திறப்பு
பூக்களின் மென்பட்டு இதழ் விரிப்பு

அமைதியின் ஓடத்தில் ஆழ்ந்தபிறப்பு
வாழ்க்கையின் முகிழ்ப்பில் ஓர்நாள்
மௌனமாய் விரியும் புதுப்புன்னகை
மகிழ்ச்சியில் துளிர்த்திடும் அமைதியின் விடியல்

நகுலா சிவநாதன்