நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853
காலைக் கதிரோனின் கண்விழிப்பு
கனவுகளின் ரீங்கார நினைவு
அமைதியின் விடியலில் இன்று
ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள்

மெல்ல விரித்தெழும் கதிரின் வீச்சு
சொல் வார்த்தை யில்லா பேரழகு
அள்ள அள்ளக் குறையாத விரிப்பு
ஆகாயம் எங்கும் முகில்களின் வனப்பு

பறவைகளின் பண்ணிசை தொடங்கும்
பாரெங்கும் ஒலிகளின் பரபரப்பு விரியும்
புதிய பாதைகளின் விழி திறப்பு
பூக்களின் மென்பட்டு இதழ் விரிப்பு

அமைதியின் ஓடத்தில் ஆழ்ந்தபிறப்பு
வாழ்க்கையின் முகிழ்ப்பில் ஓர்நாள்
மௌனமாய் விரியும் புதுப்புன்னகை
மகிழ்ச்சியில் துளிர்த்திடும் அமைதியின் விடியல்

நகுலா சிவநாதன்