” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அலை – 71

அலை-71
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025

அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும் தான் அறிவீரோ

மீண்டெழும் அலை போல
மீண்டுமொரு சுமை யாத்திரை
வேண்டாத கொடிய நோயும்
விரைந்திங்கே உணவு மாத்திரை

கரை வரும் அலைபோல
கரைந்து போக சோகங்கள்
நிரையான முயற்சி நிலைத்து
நரை வந்தாலும் நடைமுறையாக்கி

அமைதியான் கடல் போல
அலையற்ற வாழ்வு நிலையாக
சிலையற்று சிறுபயிற்சி செய்து
சீரான வாழ்வு செதுக்கிடுவோம்.

Nada Mohan
Author: Nada Mohan