” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அவதி

ஜெயம் தங்கராஜா

உடல் ரீதியாக ஒரு அவதி
கடவுள் விட்டதந்த வாழ்வின் நியதி
உளம் கொள்ளுமே அதனாலே வருத்தம்
அளந்த அளவில் வாராதே திருத்தம்

மண்ணுலக வாழ்க்கையில் அப்பப்போ பரிதவிப்பு
இன்னல்களுக்கு இரையாகி மீண்டுவிடா உத்தரிப்பு
அங்கும் இங்குமாக எதிலும் அவசரம்
திக்கு திசைமாறி வழிதெரியாது அந்தரம்

கால நெருக்கடியால் ஏற்படும் அவசரம்
வாழ அமைதியாய் கொடுக்காதே கரம்
காரியங்கள் நிறைவேறாது வேலையும் கெட்டு
ஓடியே போய்விடும் நிம்மதியும் விட்டு

Nada Mohan
Author: Nada Mohan