” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அவதி

ராணி சம்பந்தர்
அவதி அவதி அவதி எனும்
அவசரம் அவசரமாய்க்
கடுகதி ஏறிடத் துதி பாடும்
மானிடர் படும்பாடு பெரிய
பெரும்பாடானதே

கெதி கெதி எனும் கடுகடுப்புக்
கெடு குடுகுடுவென நுழைந்த
படபடப்பில் உருப்படாது போனது

மதி முட்டும் மன அழுத்தமதில்
சதியூட்டும் உயர் அழுத்தமதில்
கடகடவென உடனே செய்யாது
நாளை நாளையெனத் தள்ளிப்

போடும் சேதியில் முந்திய ஆர்வம்
கடுகடுப்பானது தவிர்க்கப் பஞ்சி
விடுத்து எஞ்சியதை அள்ளியே
அஞ்சாது அதைச் செய்து முடிக்க
நடுக்கம்,பயம் அற்றுப் போகுமே .

Nada Mohan
Author: Nada Mohan