மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

அவே இராசலிங்கம்

நினைவுநாள்!

நினைவுநாள் நிகழ்வுக் குண்டு
நிலவுநாள் குளுமைக் குண்டு
கனவுநாள் மகிமைக் குண்டு
கனதிநாள் கருத்துக் குண்டு
மனதுநாள் மதிப்புக் குண்டு
மகிழ்ச்சிநாள் இருப்புக் குண்டு
உனதுநாள் வியப்புக் குண்டு
உன்னத படைப்புக் குண்டு !

வத்திரம் உடுக்கும் நாளே
மாவலம் அடுக்கும் நாளே
ஒத்தடம் எடுக்கும் நாளே
உள்ளமும் களிக்கும் நாளே
அத்திரம் பறக்கும் நாளே
அம்புகள் பிறக்கும் நாளே
முத்தமிழ் செழிக்கும் நாளே
முன்வயம் ஒளிரும் நாளே !

கனலியே எதிர்கொண் டாற்போல்
காற்சிலம் பதிர்தல் போலாம்
அனலிடைத் தோய்ந்த மாது
அறமெனக் குரைத்தல் மேலாம்
சினமென வைகுஞ் செவ்வேள்
செந்தமிழ்க் கரங்கள் கோலாம்
புனலிடை மழையென் றாகிப்
பேசிடும் அறங்க ளாகும் !

எத்தனை யுகம்போ னாலும்
எத்தனை வதம்போ னாலும்
சித்திரம் அனைய செந்தேன்
சீருடை அணிந்த அன்னை
பத்திரம் புனையு மட்டும்
பரிட்சய மாகும் சட்டம்
வித்தென அமையு மட்டும்
விழியென இருப்பாள் அம்மா !

பாவலர் தேசபாரதி வே.இராசலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading