இசை…

வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த மகிழ்வில்
உதயமாகும் காதலே

இசைக்குள் இசையாய் வாழ்வை
ஈர்க்கும் இதயத் தாகம்
நோய்க்கு மருந்தாய் ஆற்றும்
நடந்த உளத்தைத் தேற்றும்
ராகமிசைக்குள் மதுரம்
நாமும் ரசித்து மகிழ்வோம்.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading