” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இயற்கை அனர்த்தம்

இயற்கை அனர்த்தம்

இயற்கை அனர்த்தம் தாய்நிலத்தில்
இடர்கள் நிறைந்த காலகட்டம்
பயத்தால் மக்கள் பாதிப்பே
பருவ மழையே நிற்காயோ?
துயரம் சூழ்ந்த வாழ்க்கையிது
தொல்லை விட்டு நீங்காதோ?
நெஞ்சை அள்ளும் துன்பவலை
நேர்மை அற்ற இயற்கையிடர்
தஞ்சம் புகுந்த மக்களுக்கும்
தண்ணீர் இன்றி அவதியிடர்
பஞ்சம் இன்று தலைவிரிப்பு
பாரில் இன்று பட்டினியே

மாண்டார் பலரும் அவலத்தில்
மக்கள் ஏங்கும் அவலக்குரல்
சிலரிங்கே
மீண்டு வரவே மக்களுக்கு
மீட்கும் உதவி செய்திடுவோம்
நகுலா சிவநாதன் 1832

Author: