” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இயற்கை வரமே இதுவும் கொடையே!

நகுலா சிவநாதன்
இயற்கை வரமே இதுவும் கொடையே!

காடு மலைகள் ஆறு நதிகள்
காணும் இன்பம் இயற்கை வரமே
சூழும் உலகும் சுந்தர அழகும்
வாழும் சூழல் வரமழகே!

இயற்கை எழிலும் இறைவன் படைப்பும்
இங்கித பூமிக்கு இனிய வரமே!
உயர்ச்சி காணும் உலக இன்பம்
உன்னத வார்ப்பின் பேரழகே!

இயற்கை வரமே இதுவும் கொடையே
இனிதாய் நிறைக்கும் மரங்கள் வரமே
முயற்சி உடைய வரமாய் நீயே!
மேதினி சிறக்க உயர்வாய் நாளை!!

நகுலா சிவநாதன் 1825

Author: