நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இயற்கை வரமே இதுவும் கொடையே

ஜெயம்

வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம் காற்று இயற்கையின் செல்வங்கள்
யார் இவைகளை நாசமாக்குவது உண்மையை கூறுங்கள்

உயிரும் உடலுங்கூட அந்த இயற்கையின் கொடை
பயிரும் விளைந்திடும் அதுவாக இல்லையே தடை
பஞ்சபூதங்கள் தந்த வரமே அற்புத இயற்கை
பஞ்சாக்கி பஞ்சத்தை பறக்கவிடும் நன்மையின் பொழிகை

இறைவனின் பரிசை அழிக்க நினைப்பது பாவம்
கறைகொண்ட மனிதா நீயே உனக்கிடுவதா சாபம்
பொறுமையின் போதிமரம் என்பதால் எல்லையை தாண்டலாமா
சிறுமைபுத்தி மனிதா உன்னுயிரை நீயே தீண்டலாமா

Author: