நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இயற்கை

நகுலா சிவநாதன்
இயற்கை

மழைத்துளி ஒன்று மண்ணில் விழ
மாட்சிமை பெறுமே மண்ணின் வளம்
அழைக்கும் மகவும் ஆனந்தம் பெற
அன்பே பரிணாமம் பெறுவதுண்டு

விரிக்கும் மலர்கள் இதழ்களை போலே
விந்தை மனிதர் நகைப்பதுமுண்டு
மரிக்கும் உயிர்கள் மண்ணினைத் தழுவ
மாண்புடன் வாழ்வியல் பண்புகள் பேசும்

மானுட வாழ்வியல் மந்திர குதிரை
காண்பவர் கருத்துகள் காலத்தின் வரவுகள்
தான்மட்டும் வாழாது பிறரை நேசிப்பவன்
தம்முயிர்போல் மன்னுயிர் காப்பவன்

நேசிக்கும் உறவுகள் நேசங்கள் பேணிட
சுவாசிக்கும் காற்றும் சுகமாய் வீசும்
வாசிக்கும் பழக்கம் வண்ணமாய் தோன்றிட
வாழ்க்கையின் மகிமைகள் வண்ணத்தேர் இழுத்திடும்

நகுலா சிவநாதன் 1834

Author: