” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இயற்கை

நகுலா சிவநாதன்
இயற்கை

மழைத்துளி ஒன்று மண்ணில் விழ
மாட்சிமை பெறுமே மண்ணின் வளம்
அழைக்கும் மகவும் ஆனந்தம் பெற
அன்பே பரிணாமம் பெறுவதுண்டு

விரிக்கும் மலர்கள் இதழ்களை போலே
விந்தை மனிதர் நகைப்பதுமுண்டு
மரிக்கும் உயிர்கள் மண்ணினைத் தழுவ
மாண்புடன் வாழ்வியல் பண்புகள் பேசும்

மானுட வாழ்வியல் மந்திர குதிரை
காண்பவர் கருத்துகள் காலத்தின் வரவுகள்
தான்மட்டும் வாழாது பிறரை நேசிப்பவன்
தம்முயிர்போல் மன்னுயிர் காப்பவன்

நேசிக்கும் உறவுகள் நேசங்கள் பேணிட
சுவாசிக்கும் காற்றும் சுகமாய் வீசும்
வாசிக்கும் பழக்கம் வண்ணமாய் தோன்றிட
வாழ்க்கையின் மகிமைகள் வண்ணத்தேர் இழுத்திடும்

நகுலா சிவநாதன் 1834

Author: