மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

இராசையா கௌரிபாலா

ஒன்றுபட வேண்டும்
—————————-
ஒன்றுபட்டு எழுக தமிழால்
உண்டாம் யாவர்க்கும் பலன்
இன்று இல்லைத் தமிழர்க்கு
இணைந்த வாழ்வு எங்கும்

பொங்கி எழுந்தே வாதமிழா
பொறாமை அகற்றியே வாதமிழா
பொங்கும் கடலும் வீரம்சொல்லும்
புவனம் உனதாகும் வாதமிழா

எங்கள் தோழமை உலகறியும்
வங்கம் ஆண்ட நம்குடியே
பங்கம் வேண்டாம் பகையறு
எங்கும் எம்மினம் வாழ்ந்திடவே

மரபுகள் உருமாறித் தடுமாறும்
மாற்றான் கேளிக்கையில் நாமோ
விரயமாக விவாதம் கொண்டு
வீண்பழி கேட்க்க வேண்டுமோ

ஆதியில்க் குடிகள் ஒன்றே
ஆண்டவன் படைப்பில் ஒன்றே
பீதியில் மக்கள் இன்று
பிந்தலாட்ட அரசியல் கண்டு.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading