பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இராவிஜயகௌரி

பெருகிடும் வலிமை
பெற்றுயர தடையேது…….

ஓடிடும் நொடிகள்
ஓயாத வாழ்வின் நொடி
வித்தாகும் உழைப்பின். வலு
அதனை உயிர்ப்பெழுதும். வலிமை

வலிமை. இளமை அது வளமை
என்றெழுதும் சுழல் பொழுதின் சுழற்சி
முயற்சித் துடுப்போடு. தடையலை உடைத்து
தளரா விரைவுடன் எதிர்நீச்சல் பயணம்

சோர்வு அயர்ச்சி தாழ்வுணர்வு
ஒடுங்குதல் அலட்சியம் எத்தனை
எத்தனை காரணிகள் நமக்குள் ஏற்றபடி
காரணம் தேடும் காரிய கர்த்தாக்கள் நாம்

தடை உடைத்துவிடை பகர்ந்து
வினாக்களுக்கு வியப்புற செயலாக்கி
தொடரும் சுட்டினில் தொடுபுள்ளி
நாமே நமக்கு பெருந்தடைகல்

சிதற அடித்துஉயரப்பறப்போம்
எல்லைகளற்ற வானம்பாடிகளாய்
வலிமைச்சிறகின். வனப்புணர்ந்து
விடியல்கள்ந மதாக விடிவெள்ளிகளாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading