” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா.விஜயகௌரி. அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ….

அன்னைக்கு அவள் அன்புக்கு -நிதம்
காத்தெழுதும் பரிவுக்கும் பண்புக்கும்
தலை கோதி வருடி எழும் நேசமிகு
அவள் வாழ்வுக்கும் நிகரேது உலகில்

எழுதாத. வேதம் அவள் – வாழ்வை
எழுதி வகுத்தெழுதும் -ஞானமும் அவளே
அட்சய பாத்திரமாய் நிறைந்தருளும்
அசராத அவள் பேரன்பின். பெரும் படைப்பு

திட்டமிட்டெழுதி வரும் நூலிழையின் பின்னல்
தெளிவாக மனதெழெதும்உறவில்
கரைந்தசையும் அவள் தொடுப்பு-நம்மை
வழுவாது வார்த்தெழுதும் வார்ப்பில்

சிதையாது சீர்தூக்கி சிறப்பாக்பி தினம்
செம்மையுறு வாழ்வாக்க வளமாக்க
தனையுருக்கி தளராது. விரைந்தெழுதும்
அவள் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும்

நிகருண்டோ அவனி தனில்………..

Nada Mohan
Author: Nada Mohan