” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இரா.விஜயகௌரி

சிறியவனே உனக்கோர்
மடலிது…………

எங்கள் இளையவன் இவன்
குதூகலத்தின். அமைதியின்
அன்பின். பாசத்தின். பக்குவத்தின்
நேசிப்பின் நேரடி முகவரி. இவன்

இளைஞன் இவனோர் குழந்தை
வார்த்தைகளால் இழைத்திட முடியா
பேரிழப்பு உன். உயிரின் களவு
ஒற்றை நொடியில் நீ மௌனமானாய்

தூங்கும்உன் விழி. காண முடியா. நாம்
உனை தூக்கி வளர்த்த பெற்றவர். நிலை
கனவில் கூட. கற்பனையாய்
போய் விடாதா அந்த நிமிடமென அங்கலாய்ப்பு

நேசத்துக்குரிய செல்வமே. உந்தனை
இழந்து தவிக்கும் உன் சொந்தங்கள்
கட்டி அணைத்து கதறும் குடும்பம்
ஆனாலும் நீ எங்களோடிருக்கிறாய் என்ற உணர்வு

வாழ்ந்து கொண்டிருப்பாய் நீ
நினைவுச் சுழல்களோடு புன்னகைத்து…….

Nada Mohan
Author: Nada Mohan