முயற்சியே பலம் முனைப்பே திடம்

ராணி சம்பந்தர் புது வாழ்வை நோக்கிப் புறப்படும் புயல்களிலே திட தன்னம்பிக்கையே தடமான தும்பிக்கைப் பயிற்சியதுவே முயற்சி மனிதனை ஆக்கியது சிறக்க...

Continue reading

இரா.விஜயகௌரி

வித்தகத்தை உரைக்காது
சத்தியத்தை உரைத்தெழுந்தேன்……

மொழிக்குள் விழுதாகி
மொழியமிழ்துள் இழையாகி
வேரின். கணுக்களுக்குள்
உறிஞ்சி எழும் மொழியாகி
ஆற்றின் ஒழுக்காகி -நிதம்
அழகு தமிழ் சொல்லாகி
சத்தியத்தின் பாய்ச்சலிலே
சரித்திரத்தின் வடம் பிடித்தேன்

எனக்குள் ஒளியானாள்
என் விழுதின் மொழியானாள்
அவள் உணர்வின் உறவாகி-நிதம்
உதிரத்தின் பின்னலிட்டாள்
தெறிக்கும் கதிராகி -அவள்
தெவிட்டாத அமிழ்தாகி
விளக்கும் சொல்லாகி-வாழ்வு
ஒளிக்கதிரில் மின்னலிட்டாள்

செழிக்கும் பயிரினுள்ளே -அவள்
வேத்த்தின். பொருளானாள்
ஆழ்கடலின் முத்தாகி-உறவு
கடலுக்குள் நங்கூரமிட்டாள்
தேவதையாய் வருடுகிறாள்-அவள்
சத்தியத்தை உரைத்தெழுந்தாள்

Nada Mohan
Author: Nada Mohan