இருபத்தி எட்டாம் அகவை -63

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025

இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன் பாமுக தொலைக்காட்சியுமே..

சிந்தனையை பெருக்கிச் சென்றாய்
சிந்திக்க எமை வைத்தாய்
இளையோர், பெரியோர்
இணையக் காலம் கொடுத்தாய்

உலக நடப்பை எடுத்து வந்தாய்
ஊரின் சிறப்பை புகட்டிச் சென்றாய்
சொந்த ஆக்கம் தனைக்கொண்டு
சோர்ந்திடமால் தாய்மொழி வளர்த்தோம்!

தாய்மொழி வளர்த்த நீயவளே
தொடர்ந்து உம் பணி மிளிரட்டும்
மேலும் வளர்ந்து நன்றியோடு
மீண்டும் தொடர்ந்து பயணிப்போம்.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading