இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 223
இப்போதெல்லாம்

இப்போதெல்லாம் இயற்கையே மாறியது
பனிமழை காண தவம் இருக்க வேண்டுமே
அதுபோல மாறிவிட்டனர் மக்களும்
ஏற்போமே இயற்கையின் மாற்றத்தையும்

உலகமே மக்களின் கைக்குள்
அதனால் ஏமாற்றுபவர்கள் கூடி விட்டதே
அவதானத்துடன் நாமும் இருப்போமே
உறவுகளின் தொடர்பும் அருகி வருகுதே

நினைத்ததை செய்து தர AI
நினைத்த வீடியோ செய்ய sora
திரைப்படம் எடுக்க ஒருவர் காணுமே
எல்லாவற்றையும் செய்ய கணனி போதுமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading